Categories: தமிழகம்

முடிவுக்கு வந்தது கருப்பனின் ஆட்டம் : மயக்க ஊசி செலுத்திய யானை வேறு வனப்பகுதிக்கு மாற்றம்!!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் மான், யானை, புலி, சிறுத்தை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இவை அவ்வப்போது வனப்பதியை விட்டு வெளியேறி விவசாய நிலங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதம் செய்வதும், விவசாயிகள் வளர்த்து வரும் கால்நடைகளை வேட்டையாடுவதும் வாடிக்கையாக வருகின்றன.

குறிப்பாக தாளவாடி மற்றும் ஜீரகள்ளி உள்ளிட்ட வனப்பகுதியை விட்டு வெளியேறும் யானைகள் தொடர்ந்து விவசாயிகள் பயிரிட்டுள்ள விவசாய பயிர்களை சேதம் செய்து வந்தது.

இந்நிலையில் கடந்த ஒரு வருடங்களாக தாளவாடி ஜீரகள்ளி உள்ளிட்ட வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து கருப்பன் என்ற ஒற்றை யானை விவசாய பயிர்களை சேதம் செய்தும் விவசாயிகளை அச்சுறுத்தியும் வந்தது.

இந்த யானையைப் பிடிக்க முதுமலை புலிகள் காப்பகம், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகிய பகுதிகளில் இருந்து கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையைப் பிடிக்க வனத்துறையினர் மூன்று முறை முயற்சி செய்தும் கருப்பன் யானை பிடிபடாமல் வனத்துறையினருக்கு போக்கு காட்டி வந்தது.

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி மற்றும் மாரியப்பன் ஆகிய கும்கி யானைகள் நேற்று வரவழைக்கப்பட்டு கருப்பன் யானையை பிடிக்க வனத்துறையினர் தீவிரம் காட்டி வந்த நிலையில் இன்று காலை தாளவாடி வனப்பகுதியை ஒட்டியுள்ள மகராஜன் புறம் என்ற பகுதியில் உள்ள மூர்த்தி என்பவரது தோட்டத்தில் சுற்றிக் கொண்டிருந்த கருப்பன் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

மயக்க ஊசி செலுத்தப்பட்ட கருப்பன் யானையை தற்போது லாரியில் ஏற்றி வேறு வனப்பகுதிக்குள் சென்று கொண்டுவிட வனத்துறையினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்ந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வந்த கருப்பன் யானையை பிடிக்க தாளவாடி மலைப்பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் செய்து வந்த நிலையில் தற்போது கருப்பன் யானை பிடிபட்டுள்ளது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

1 hour ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

2 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

2 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

3 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

3 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

4 hours ago

This website uses cookies.