கரூர் : கரூர் அருகே அமராவதி ஆற்றில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொது மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள ஆனைமலையில் அமராவதி ஆறு உருவாகிறது. அங்கிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டங்கள் வழியாக கரூரை வந்தடைந்து, திருமுக்கூடலூர் என்ற இடத்தில் காவிரி ஆற்றுடன் இந்த நதி இணைகிறது.
இந்த நதியில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்னர் வரை அதிகளவு தண்ணீர் ஓடியதால், ஆற்றின் குறுக்கே அணைப்பாளையத்தில் 1876-இல் தடுப்பணை கட்டப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அரவக்குறிச்சி அடுத்த அணைப்பாளையம் தடுப்பணையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
குறிப்பாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அணைப்பாளையம் தடுப்பணையில் வெள்ளநீர் சீறிப்பாய்ந்து செல்கிறது. தற்போது அமராவதி ஆற்றில் 14 ஆயிரம் கன அடி நீர் வந்து கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடல் போல் காட்சி அளிக்கும் வரலாற்று சிறப்புமிக்க இந்த அணையை சுற்றிலும் கருவேல மரங்கள் முளைத்து, அடர்ந்து வனம் போன்று காட்சியளிக்கிறது.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.