கரூர் : வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் பாஜக அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும் என்று கரூர் மாவட்ட பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கரூர் மாவட்டம், பாஜக கரூர் மேற்கு ஒன்றியத்தலைவர் நல்லசிவம், கரூர் மாவட்ட பாஜக மருத்துவரணி தலைவர் டாக்டர் அரவிந்த் கார்த்திக் ஆகியோர் தலைமையில், அதிமுக திமுக கட்சிகளை சார்ந்த 400க்கும் மேற்பட்ட நபர்கள் பாஜக மாவட்ட தலைவர் செந்தில்நாதன் முன்னிலையில் பாஜக கட்சியில் தங்களை இணைத்து கொண்டனர்.
கரூர் மாவட்ட பாஜக அலுவலகத்தில் கோலகலமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஆறுமுகம், கோபிநாத், மாவட்ட துணை தலைவர்கள் கரூர் செல்வம், குளித்தலை ராஜாளி செல்வம், மாவட்ட செயலாளர் டைம்ஸ் சக்தி, மாவட்ட விவசாய அணி தலைவர் அக்னீஸ்வரா செல்வம், பாஜக மாவட்ட இளைஞரணி தலைவர் தீனசேனன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக பாரத் மாதா கீ ஜே என்று கட்சியினர் முழக்க மிட்ட போது, மைக்கை வாங்கி பேசிய பாஜக தலைவர் வி.வி.செந்தில்நாதன், “நாம் நமது பாரத தாயினை வணங்குகின்றோம். ஆகவே, மொழி எதுவாகினாலும், நமது பாரத மண்ணினை வாழ்த்துவோம், வணங்குவோம்.
ஆகவே வணங்க வேண்டிய மொழி வேறு ஆக இருந்தாலும், நாம் நமது மொழியிலேயே கூறலாம். பாரத மாதா வாழ்க,” என்று அவர் கூற அனைத்து பாஜக பிரமுகர்களும் வாழ்க கோஷங்களை எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் ஏராளமான பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசிய பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன், “வரக்கூடிய 2024 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில், இந்திய அளவில் தமிழகம் பாஜகவில் தனிப்பங்கு வகிக்கும். ஆகவே அதைத்தொடர்ந்து வரும் சட்டசபை தேர்தலில் பாஜக அண்ணாமலை தலைமையில் தமிழக சட்டசபை அமையும். அதற்கான நேரம் வந்து விட்டது,” என்றார்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.