கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த நபருக்கு நெஞ்சு வலி ஏற்பட்ட நிலையில், ஆம்புலன்ஸ் இல்லாததால் தீயணைப்பு வாகனம் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
வாரந்தோறும் திங்கட்கிழமை கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு மனுக்களை அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் மாவட்ட ஆட்சி தலைவர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் புகலூர் பகுதியை சேர்ந்த தேவராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள குறைதீர்க்கும் கூட்ட அரங்கிற்கு உள்ளே வந்துள்ளார்.
தேவராஜ் மனு அளிக்க வரிசையில் நின்று கொண்டிருந்தபோது, திடீரென மயக்கம் அடைந்து கீழே விழுந்துள்ளார். நெஞ்சு வலியால் கீழே விழுந்துள்ளார் என்று கூறப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர் ஒரு மருத்துவர் என்பதால், அவரை பரிசோதித்து மருத்துவமனைக்கு அனுப்புமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில், முதல் உதவி தருவதற்கான ஆம்புலன்ஸ் எதுவும் இல்லாததால், நெஞ்சு வலியால் அவதிப்பட்ட தேவராஜ் தீயணைப்பு துறை வாகன மூலம், கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திங்கட்கிழமை மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் நிலையில், ஆயிரம் கணக்கான பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வருவது வழக்கம். இப்படியிருக்கையில், ஒரு ஆம்புலன்ஸ் கூட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லாமல், தீயணைப்பு துறை வாகனத்தில் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனைக்கு அஏற்றி சென்ற சம்பவம் இங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.