கரூரில் நிதி நிறுவன உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட அருகம்பாளையம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (33) நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் கரூர் பகுதியைச் சேர்ந்த கௌதம் (28), ஆனந்த் (27), மதன் (30) ஆகிய மூன்று பேரும் கடந்த மூன்று ஆண்டுகளாக பணிபுரிந்து வந்துள்ளனர். வரவு செலவு கணக்கில் குளறுபடி ஏற்பட்டதால் மூன்று பேரையும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வேலையிலிருந்து தினேஷ்குமார் நிறுத்தி உள்ளார்.
மேலும், கௌதம் 3 லட்ச ரூபாய்க்கு மேல் தரவேண்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கௌதமிடம் கொடுத்த பணத்தை நிதி நிறுவன உரிமையாளர் தினேஷ்குமார் திருப்பி கேட்டுள்ளார்.
இதில் கோபம் அடைந்த கௌதம், ஆனந்த் மற்றும் மதன் ஆகிய இருவரையும் அழைத்துக் கொண்டு நேற்று நள்ளிரவு 11.00 மணியளவில் பாலாஜி நகர் பகுதியில் அமைந்துள்ள தினேஷ் குமார் வீட்டு சுவரின் மீது பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர்.
இந்த காட்சி தினேஷ் குமார் வீட்டின் முன்பு உள்ள சி சி டிவியில் பதிவாகியுள்ளது. இது தொடர்பாக தினேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் சிசிடிவி ஆதாரத்தை வைத்துக்கொண்டு பெட்ரோல் குண்டு வீசிய மூன்று பேரையும் வெங்கமேடு காவல் நிலைய போலீசார் கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.