கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அரசு அதிகாரி கார்த்தி மாமனார் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சித் துறை துணைப் பொறியாளர் கார்த்திக் என்பவர் 01-04-2014 முதல் 31-03-2021 காலகட்டத்தில் சட்டவிரோதமாக சொத்து சேர்த்த வழக்கில் கரூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்கண்காணிப்பாளர் நடராஜன் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் கார்த்திக், அவரது மனைவி கவிதா மற்றும் கார்த்திக் தாயார் காளியம்மாள் ஆகிய மூன்று பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதில், விசாரணை செய்யப்பட்ட காலக் கட்டத்தில் சட்ட விரோதமாக ஈட்டப்பட்ட தொகை மூலம் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் ரூ. 1,49, 91,062 இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், கார்த்திக் மனைவி கவிதா மற்றும் தாயார் காளியம்மாள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 66 சதவீதம் சொத்து சேர்த்துள்ளது தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அடுத்துள்ள மூலமங்கலம் பகுதியில் அமைந்துள்ள கார்த்திக்கின் மாமனார் ராமலிங்கம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.