கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியா பயோ எனர்ஜி தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு பெண் உட்பட ஐந்து ஆண்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், அசாம் மாநிலத்தை சார்ந்த சின்தோமணி போரோ (44 வயது). இவர் தனது இரண்டு மகன்களுடன் 20 நாட்களாக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த சுபோல் முர்மோ (32 வயது) ஆகியோர் கிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் நிறுவனத்திற்கு அருகே மது அருந்தி கொண்டிருந்த போது, சுபோல் முர்மோ அசாம் மாநிலத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். அதற்கு சின்தோமணிபோரோ என்ற பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மதுபோதையில் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார்.
காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணின் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சுபோல் முர்மோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த பெண்ணின் உடல் இந்த கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.