கரூர் ; வேலாயுதம்பாளையம் அருகே திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அருகே செயல்பட்டு வரும் தனியா பயோ எனர்ஜி தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கு ஒரு பெண் உட்பட ஐந்து ஆண்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், அசாம் மாநிலத்தை சார்ந்த சின்தோமணி போரோ (44 வயது). இவர் தனது இரண்டு மகன்களுடன் 20 நாட்களாக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அதே நிறுவனத்தில் அசாம் மாநிலத்தைச் சார்ந்த சுபோல் முர்மோ (32 வயது) ஆகியோர் கிடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது.
இந்த நிலையில், நேற்று இரவு இருவரும் நிறுவனத்திற்கு அருகே மது அருந்தி கொண்டிருந்த போது, சுபோல் முர்மோ அசாம் மாநிலத்திற்கு செல்வதாக கூறியுள்ளார். அதற்கு சின்தோமணிபோரோ என்ற பெண்மணி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தியதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த அவர் மதுபோதையில் பெண்ணை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளார்.
காலையில் அந்த வழியாக சென்றவர்கள் பெண்ணின் சடலத்தை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுப்பதன் அடிப்படையில் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். சுபோல் முர்மோவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இறந்த பெண்ணின் உடல் இந்த கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.