கரூர் : கரூரில் முன்னாள் ராணுவ வீரரிடம் தனிபட்டா மாற்ற லஞ்சம் கேட்ட நில அளவையர் லஞ்ச ஒழிப்பு போலீஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பபை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மதுரை பைபாஸ் சாலையில் உள்ள எல்.வி.பி நகர் பகுதியில் வசிப்பவர் சரவணன் (46). இவர் கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டாவிற்கு மாற்ற, நில அளவையர் துறைக்கு முயலும் செல்லும் போது, அங்குள்ள பீல்டு சர்வையரான ரவி (40) என்பவர் இந்த தனிப்பட்டா மாறுதலுக்கு முதலில் ரூ 8 ஆயிரம் கேட்டுள்ளார். அவர் முடியாது என்று கூற, இறுதியில் ரூ 5 ஆயிரம் தான் இறுதி என்று கூறி பணத்துடன் வாருங்கள் உடனே மாற்றித்தருகின்றேன் என்று கூறியுள்ளார்.
இந்நிலையில், கரூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு போலீஸாரிடம் கரூர் தாலுக்கா அலுவலகத்தின் பின்புறம் உள்ள நில அளவைத்துறையில் பகிரங்கமாக லஞ்சம் கேட்கின்றார்கள் என்று முன்னாள் ராணுவ வீரர் சரவணன் முறையிட லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி நடராஜன் தலைமையிலான போலீஸார், முன்னாள் ராணுவ வீரரை பணத்துடன் செல்ல சொல்லி, பின்புறம் சென்ற லஞ்ச ஒழிப்பு போலீஸார் கையும் களவுமாக பிடித்து விசாரித்து வருகின்றனர்.
மேலும், இதே போல, கூட்டுப்பட்டாவிலிருந்து தனிப்பட்டா மாற்றம் எத்தனை நடந்துள்ளது, யார், யாரிடம் எவ்வளவு வாங்கியுள்ளார். இவரிடம் வாங்கிய பணம் இவருக்கு மட்டும் தானா ? மேல் அதிகாரிகள் யாரேனும் உள்ளனரா ? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
கரூர் தாலுக்கா அலுவலக வளாகத்தில் இந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் தீவிரம் அரசு அதிகாரிகளிடம் பரபரப்பினையும், மக்களிடம் சந்தோஷத்தினையும் ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
கடலூரில் நடந்த உச்சக்கட்ட கொடூரமான சம்பவம் தமிழகத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூரை சேர்ந்த பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதிக்கு 2 மகன்,…
தி.மு.க ஐடி விங்க், தமது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கார்டூன் பதிவை ஜூன் 17ஆம் தேதி மாலை வெளியிட்டது. அந்த…
வெளியானது குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள “குபேரா” திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.…
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
This website uses cookies.