கரூர் : கரூரில் பேரூராட்சி வார்டு பகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுவதற்காக 23 வயதான பட்டதாரி இளம்பெண் வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நங்கவரம் பேரூராட்சியில் அதிமுக கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர். நங்கவரம் பேரூராட்சி பகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் 8வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு 23 வயதான பட்டதாரி பெண் தமிழ்ச்சோலை தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
முன்னதாக அதிமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு உற்சாகமாக அவரை வரவேற்று அளித்தனர். தனது வேட்புமனுவை நங்கவரம் பேரூராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரயிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகழ்ச்சியில் 18-வது பேரூர் கழக செயலாளர் திருப்பதி, பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, முன்னிலையில் மருதூர் 15வது வார்டு குளித்தலை யூனியன் சேர்மன் டி.டி.விநாயகம், மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் திருநாவுக்கரசு முன்னிலையில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.