கரூர் : கரூர் அருகே சிறுமியைக் கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்ட வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே உள்ள மேட்டுமருதூர் அரிசனதெரு பகுதியை சேர்ந்தவர் திருமால் மகன் ராகுல் என்கின்ற ஹரிஹரன் (23). இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் 17 வயதான சிறுமி ஒருவரை கடத்தி சென்று இருக்கலாம் என சந்தேகத்தின் பெயரில் அச்சிறுமியின் பெற்றோர் குளித்தலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இதுகுறித்து குளித்தலை போலீசார் சிறுமி மாயம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில், ராகுல் சிறுமியை கடத்தி சென்றது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. மேலும் சிறுமியை கடத்திச் சென்று திருமணம் செய்தது உறுதியானது. இதையடுத்து சிறுமியின் மாயமான வழக்கு பிரிவை மாற்றி குழந்தை திருமண தடுப்பு சட்டம் மற்றும் போக்சோ சட்ட பிரிவுகளின் கீழ் ராகுலை குளித்தலை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ராகுல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கரூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.