உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
உக்ரைனில் தற்போது போர் மூண்டுள்ள நிலையில், கல்வி மற்றும் வேலை நிமித்தமாக சென்ற பிற நாட்டைச் சேர்ந்தவர்களும் அங்கு சிக்கிக் கொண்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, இந்தியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக மாணவர்களை எப்படியாவது மீட்டுத் தர வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலினும், மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
மேலும், உக்ரைனில் இருக்கும் தமிழர்களை மீட்பதற்காகவும், அவர்களின் தரவுகளை சேகரிப்பதற்காகவும் சென்னையில் தமிழக அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், உக்ரைனில் கல்வி பயில்வதற்காகச் சென்ற தங்களின் மகன்களை மீட்டுத் தரக்கோரி, கரூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாணவர்களின் பெற்றோர்கள் மனு அளித்தனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த திம்மாச்சிபுரத்தை சார்ந்த சின்னதுரை மகன் சூர்யா, 3ம் ஆண்டு ஏரோநாட்டிக்கல் என்ஜினியரிங் கல்வி பயின்று வருவதாகவும், காந்திகிராமத்தை சார்ந்த தங்கவேல் மகன் தரன் 3ம் ஆண்டு மருத்துவக் கல்வி பயின்று வருவதாகவும், பசுபதிபாளையம் அருணாச்சல நகரை சார்ந்த ஆண்டனி கேப்ரியேல் மகள் ஸ்ரீநிதி, மருத்துவக் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருவதாகவும் கூறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மீட்டு தரக் கோரி மனு அளித்தனர்.
தற்போது போர் நடந்து வரும் நிலையில் ஏ.டி.எம் பணம் எடுக்க முடியவில்லை என்றும், உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சிரமப்படுவதாகவும், 2 நாட்களாக மெட்ரோ சுரங்க பாதைகளிலும், கல்லூரி விடுதிகளிலும் தங்கி இருப்பதாகவும் அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.