கரூர் அருகே சாலை ஓரத்தில் சாக்கு மூட்டையில் விண்ணப்ப படிவங்களுடன் கிடந்த காலாவதியான ஓட்டுநர் உரிம அடையாள அட்டைகளை மீட்ட போலீசார், இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர் மாவட்டம் புலியூரை அடுத்து உள்ளது உப்பிடமங்களம். அந்த கிராமத்தில் சுடுகாட்டுப் பகுதியில் சாக்கு மூட்டை 2 நாட்களாக கிடந்துள்ளது. இதனை பார்த்த அந்த பகுதி கிராம மக்கள், அதற்குள் என்ன இருக்கிறது என்று திறந்து பார்த்துள்ளனர். அதில் காலாவதியான ஓட்டுநர் உரிம அட்டைகள், அதற்கான விண்ணப்ப படிவம் போட்டோக்கள் ஒட்டப்பட்டு, ராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் என முத்திரை வைக்கப்பட்டிருந்ததுடன் கிடந்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளியணை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அங்கு வந்த போலீசார் சாக்கு மூட்டையில் நூற்றுக் கணக்கான ராமநாதபுரத்தை சார்ந்த ஓட்டுநர் உரிமம் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. மேலும், அதற்குரிய விண்ணப்பப் படிவங்கள் விண்ணப்பித்தவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்ட நிலையில் கிடந்துள்ளது.
இதனையடுத்து அவற்றை விசாரணைக்காக வெள்ளியணை காவல் நிலையத்திற்கு போலீசார் எடுத்துச் சென்றனர். ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த ஓட்டுநர் உரிம அடையாள அட்டைகள் சாலையோரத்தில் சாக்கு மூட்டையில் போடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.