கரூரில் சலூன் கடை ஒன்றில் கல்லாப் பெட்டியில் 15 ஆயிரம் ரொக்கத்தை திருடி சென்ற அடையாளம் தெரியாத பெண்மணியின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.
கரூர் அடுத்த தொழில்பேட்டையை சேர்ந்தவர் கார்த்திக் முருகேசன் (29) மற்றும் கரூர் வையாபுரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுதா கணேஷ் (29). இவர்கள் இருவரும் சேர்ந்து பார்ட்னர்ஷிப் முறையில் கரூர் மாநகரப் பேருந்து நிலையம் அருகில் உள்ள காமாட்சி அம்மன் கோவில் தெருவில் BLON சலூன் என்ற அழகு நிலையம் நடத்தி வருகின்றனர்.
இந்த சலூன் கடையில் அழகு நிலையம் மற்றும் வரவேற்பரை என இரண்டு அறைகள் அமைந்துள்ளன. கடந்த 21ஆம் தேதி பிற்பகல் சுமார் 12.05 மணியளவில் அழகு நிலையத்தின் உள்பக்க அறையில் வாடிக்கையாளர்களுக்கு முடி திருத்துதல் மற்றும் அழகுப்படுத்தும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, முன்பக்க வரவேற்பறையில் யாரும் இல்லாத நேரம் பார்த்து, உள்ளே நுழைந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்மணி ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த 15 ஆயிரம் ரொக்கத்தை அங்கிருந்து திருடி சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் அழகு நிலையத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவான அந்த காட்சிகளை கடை உரிமையாளர்கள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். தற்போது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.