கரூரில் மணல் கொள்ளை விவகாரத்தில் அரசியல் கட்சிகள் கூட கண்டுகொள்ளாத நிலையில், கடை உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து எதிர்ப்பை பதிவு செய்தனர்.
கரூர் மாவட்டம், மண்மங்கலம் வட்டம் வாங்கல் பகுதியை அடுத்த மல்லம்பாளையம் பகுதியிலிருந்து, கணபதிபாளையம் என்கின்ற ஸ்டாக் பாயிண்ட் பகுதிக்கு மணல் ராட்சத இயந்திரங்களால் அள்ளப்பட்டு லாரிகளில் தினந்தோறும் 600 க்கும் மேற்பட்ட லாரிகளில் எடுத்து செல்லப்பட்டு விநியோகிக்கப்பட்டு வருகின்றது.
கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, அரசு மணல் குவாரிகளை முடக்கி, அதற்கு மாற்றாக கிரஷர் மண்ணை உபயோகப்படுத்துமாறு அறிவுறுத்திய நிலையில், இந்த வாங்கல் காவிரி ஆற்றில் தொடரும் மணற்கொள்ளையால், அதிமுக கட்சி, பாஜக உள்ளிட்ட கட்சிகள் கூட மெளனம் காத்து வருகின்றன.
இந்த நிலையில், இந்த மணல் குவாரியாலும், மணல் லாரிகளாலும் விபத்து ஏற்படுவதாக கூறி, அதை கண்டித்து வாங்கல் கடைவீதி உரிமையாளர்கள் தங்கள் கடைகளை அடைத்து போராட்ட களத்தில் குதித்து உள்ளனர்.
இதில் கட்சி சார்பில்லாமல் அமைதி வழி போராட்டம் நடத்தி வரும் இந்த கடைவீதி உரிமையாளர்களது போராட்டத்திற்கு, அனைத்து பொதுமக்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
வேலூரில் பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுகுழு கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இதில் மாவட்டத்தலைவர் வெங்கடேசன்,…
மனதை கவர்ந்த நடிகை :”அருவி” திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் அதிதி…
சித்தூர் மாவட்டம், குப்பம் நகராட்சி எல்லையில் உள்ள நாராயணபுரத்தில், கடனை வசூலிக்க ஒரு பெண்ணை மரத்தில் கட்டி, தாக்கிய மனிதாபிமானமற்ற…
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…
வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…
நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…
This website uses cookies.