கரூர் : சித்திரை தமிழ் புத்தாண்டையொட்டி கரூர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகருக்கு 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.
கரூர் சின்ன அண்டன் கோவில் ரோடு அருகே உள்ள அண்ணா சாலையில் அமைந்திருக்கும் அருள்மிகு கற்பக விநாயகர் ஆலயத்தில், தமிழ் புத்தாண்டான சித்திரை 1 புத்தாண்டு மற்றும் மலையாள புத்தாண்டான விசு பிறப்பு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குரு பெயர்ச்சி மற்றும் புத்தாண்டு ஆகிய நிகழ்ச்சியை ஒட்டி, 750 கிலோ காய்கறிகள் மற்றும் பழங்களால் மூலவர் கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களை அலங்கரிக்கப்பட்டு, பக்தர்களுக்கு சுவாமிகள் அருள்பாலித்தனர்.
முன்னதாக கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு குருபகவான் தேர்ச்சி அடைந்ததால் குரு பகவானுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. தமிழ் வருடப்பிறப்பு அன்று குரு பெயர்ச்சி நிகழ்ச்சியும் வருவது அபூர்வம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
மேலும், மூலவர் அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்கள் காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.