கரூர் ; அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் மனைவி கொடுத்த புகாருக்கு விசாரணைக்கு வந்த கணவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கரூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கட்டளை கிராமத்தை சேர்ந்தவர் சித்தார்த்தன் மகன் தர்மேந்திரன் (39). விவசாய கூலி வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு மனைவி சத்யா (37), புலியூரில் தனியார் பள்ளியில் ஆசிரியராக இருந்து வருகிறார். இவருக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில் கணவர், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, சத்யா கணவரை விட்டு தனது பிள்ளைகளுடன் 8 வருடமாக தனியாக வசித்து வருகிறார். இதனிடையே, சத்யா குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கடந்த 18ந்தேதி அன்று கணவர் 2வது திருமணம் செய்து விட்டதாக புகார் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் நேற்று இரண்டு குடும்பாத்தார்களுடன் சத்யா, தர்மேந்திரன் விசாரணைக்கு வந்துள்ளனர். தொடர்ந்து குழந்தைகள் எதிர்காலம் கருதி, முறையாக குடும்ப நடத்திடவும் அறிவுரை வழங்கி போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். வீட்டுக்கு செல்வதாக சென்ற தர்மேந்திரன் வெகுநேரம் கழித்து குளித்தலை அனைத்து மகளிர் காவல்நிலையம் அருகே விஷம்குடித்து விட்டதாக உறவினர்களிடம் கூறியுள்ளார்.
உறவினர்கள் தர்மேந்திரனை அழைத்து, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதல் சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக முசிறி தனியார் மருத்துவ மனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இறந்தவரின் உடல் குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக உடலை வைத்துவிட்டு, தர்மேந்திரன் தந்தை சித்தார்த்தன் அளித்த புகாரின்படி குளித்தலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.