கரூரில் தவறான சிகிச்சை அளித்ததால் பெண் உயிரிழந்ததாக குற்றம்சாட்டி, உறவினர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மணவாடி ஊராட்சி கல்லுமடை காலனி சார்ந்த ஜோதி (27). கணவர் பெயர் முகேஷ்குமார். ஜோதிக்கு உப்பிடமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்ப கட்டுப்பாடு செய்வதற்காக நேற்று மாலை உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்காக மயக்க ஊசி செலுத்தப்பட்டது.
அப்போது, அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால், கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். மருத்துவர்கள் ஜோதியை பரிசோதித்தனர் வழியில் இறந்துள்ளார் என்று தெரிவித்ததால், இறந்த பெண்ணின் உறவினர்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும், மயக்க மருந்தின் அளவு அதிகப்படியான செலுத்தியதால் இறந்துள்ளார் என்று குடும்பத்தினர் குற்றம்சாட்டினர். உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்ததின் பேரில் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் ஜோதியின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.