கரூரில் அரசு பேருந்திற்கு வழி விடாமல் இரு சக்கர வாகனத்தை ஓட்டிய 2 இளைஞர்களை தட்டிக் கேட்ட நடத்துனர், ஓட்டுநர், பயணிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 இளைஞர்களை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்.
கோவையிலிருந்து திருச்சி நோக்கி அரசுப் பேருந்து ஒன்று இன்று அதிகாலை 2.30 மணியளவில் சென்று கொண்டிருந்தது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து லைட்ஹவுஸ் கார்னர், திருமாநிலையூர், தெரசா கார்னர் வழியாக சென்று கொண்டிருந்தது.
அப்போது பேருந்திற்கு முன்னாள் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமானூரை சார்ந்த பிரபு, புதுக்கோட்டையை சார்ந்த பாக்கியராஜ் ஆகியோர் வழி விடாமல் சென்றுள்ளார். ஒரு கட்டத்தில் பேருந்தின் முன்பக்கம் இரு சக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக நடத்துனர் குமார், ஓட்டுநர், பயணிகள் ஆகியோர் இளைஞர்களிடம் ஏன் இப்படி வழி விடாமல் இருக்கிறீர்கள் என கேட்டதற்கு கெட்ட வார்த்தையால் திட்டி, தாக்கி, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து பிரபு, பாக்கியராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்ததுடன், அவர்கள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.