இந்திய பிரதமரின் ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் திட்டத்தின் கீழ் மதுரை ரயில் நிலையத்தில் உலர் மீன் விற்பனை கூடம் அமைக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் அந்தந்த பகுதிகளுக்கு ஏற்ற பாரம்பரிய உணவு வகைகள் உற்பத்தி பொருட்களை ரயில் நிலையங்களில் விற்பனை செய்வதற்கு, இந்திய பிரதமரின் ஒன் ஸ்டேஷன் ஒன் ப்ராடக்ட் திட்டத்தின் கீழ் இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
சுற்றுலா பயணிகளாக பல்வேறு மாநிலங்களுக்கு செல்லும் இந்திய மக்களுக்கு அந்தந்த பகுதிகளின் முக்கியத்துவம் குறித்து அறிந்து கொள்ள மற்றும் அப்பகுதி சார்ந்த பொருட்களை ரயில் நிலையத்திலேயே வாங்கிக் கொள்ள செய்யப்பட்டுள்ள இந்த ஏற்பாடு ரயில் பயணிகளிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
அந்த அடிப்படையில் மதுரை ரயில் நிலையத்தில் மதுரைக்கே உரித்தான சுங்குடி சேலை விற்பனை கூடம் ஏற்கனவே இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது முதல் முறையாக இந்திய ரயில்வேயில் முதல்முறையாக மதுரை ரயில் நிலையத்தில் ‘லூமிரியன்ஸ் டிரை பிஷ் ஹட்’ என்னும் கருவாட்டு விற்பனை கூடம் இன்று துவங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவர்கள் எளிதில் வாங்கிச் செல்லும் வண்ணம் ரூபாய் நூறிலிருந்து இந்த கருவாடுகள் விற்பனை செய்யப்பட உள்ளன.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மண்டபம் பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் தயார் செய்யப்பட்டு இந்த விற்பனை கூடத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.