Categories: தமிழகம்

‘மரங்களால்’ நம்மாழ்வாரை நினைவு கூறும் காவேரி கூக்குரல்! ஒரே நாளில் 1.94 லட்சம் மரங்களை நட்ட விவசாயிகள்!!

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் ஐயாவின் நினைவு தினமான இன்று (டிச.30) காவேரி கூக்குரல் இயக்கத்தின் மூலமாக தமிழ்நாட்டில் ஒரே நாளில் ஒரு லட்சத்து 94 ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு விவசாயிகள் சாதனை படைத்துள்ளனர். மொத்தம் 88 விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான 736 ஏக்கர் பரப்பிலான விவசாய நிலங்களில் இம்மரங்களை நடவு செய்துள்ளனர்.

நம்மாழ்வார் ஐயா இயற்கை விவசாயம், மர வளர்ப்பு மற்றும் மண் வள பாதுகாப்பிற்காக தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டவர். அவரின் சிந்தனையாலும் செயல்பாடுகளாலும் எண்ணற்ற இளைஞர்கள் இயற்கை விவசாயத்திற்கு மாறியுள்ளனர். நம்மாழ்வார் ஐயா ஈஷாவின் சுற்றுச்சூழல் பணிகளிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். ஈஷா மண் காப்போம் இயக்கம் மற்றும் காவேரி கூக்குரல் இயக்கம் அவரது வழியில் தொடர்ந்து பயணித்து வருகிறது. நம்மாழ்வாரின் நினைவு தினத்தில் இயற்கை ஆர்வலர்கள் பல்வேறு வகையில் அவரை நினைவுகூர்கிறார்கள்.

அந்த வகையில் காவேரி கூக்குரல் இயக்கம் விவசாய நிலங்களில் டிம்பர் மரங்களை நடவு செய்து நம்மாழ்வாரின் சேவையை நினைவு கூர்ந்து வருகிறது.

டிம்பர் மரங்களை நடுவது பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு தீர்வாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு வாய்ப்பாகவும் உள்ளதால், காவேரி கூக்குரல் விவசாயிகளை டிம்பர் மரங்களை சாகுபடி செய்ய தொடர்ந்து ஊக்குவிக்கிறது. சாதாரணமாக சாகுபடி செய்யும் மற்ற பயிர்களோடு வரப்போரங்களில் அல்லது வேலியோரங்களில் மரம் வளர்ப்பதினால் விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

தேக்கு, மலைவேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகாகனி போன்ற நல்ல விலை கிடைக்கக்கூடிய டிம்பர் மரங்கள் வளர்க்க உகந்தவை. மேலும் மரங்களில் மிளகு சாகுபடி செய்வதின் மூலம் தொடர் வருமானம் பெறவும் வாய்ப்புள்ளது.

கடலூர் மற்றும் திருவண்ணாமலையில் உள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் தரமான டிம்பர் நாற்றுகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த நாற்றுகள் தமிழகம் முழுவதும் உள்ள 50-க்கும் மேற்பட்ட ஈஷா நாற்று பண்ணைகள் மூலம் விவசாயிகளுக்கு 3 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது.

தற்போது நல்ல மழை பெய்துள்ளதால் விவசாயிகள் மரக்கன்றுகளை வாங்கி நடத்துவங்கலாம். மரம் சார்ந்த விவசாயம் குறித்த ஆலோசனைகளைப் பெறுவதற்கு காவேரி கூக்குரல் இயக்கத்தின் 80009 80009 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

4 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

5 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

5 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

6 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

7 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

7 hours ago

This website uses cookies.