தமிழகம்

கவின் காதலிக்கு அடி உதை…. சிக்கிய 3வது நபர் : அதிரடி காட்டிய சிபிசிஐடி!

நெல்லையில் கவின் ஆணவக் கொலை சம்பவத்தில் சிபிசிஐடி போலீஸ் விசாரணயில் பல தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐடி ஊழியரான கவின், சாதியை மீறிய காதலால் படுகொலை செய்யப்பட்டார். காதலி பணிபுரியும் மருத்துவமனயில் தனது மாமாவுக்கு சிகிச்சை எடுத்துக் கொள்ள சென்ற கவினை, காதலியின் சகோதரர் சுர்ஜித் பேச வேண்டும் என அழைத்துள்ளார்.

பின்னர் கவினை வெட்டிப் படுகொலை செய்த அவர் தலைமறைவானார். பின்னர் இந்த சம்பவத்தில் சுர்ஜித் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தையும் காவல் ஆய்வாளருமான சரவணன் கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், ஆணவக் கொலையை தடுக்க சட்டம் வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கினர்.

ஒரு பக்கம் இந்த வழக்கு குறித்த விசாரணை நடத்த சிபிசிஐடியிடம் ஒப்படைப்பட்டது.
இது குறித்த விசாரணையில், 3வது நபராக ஜெயபால் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணையில், கொலை செய்தது எப்படி என சுர்ஜித்தை சம்பவம் நடந்த இடத்திற்கு சிபிசிஐடி போலீசார் அழைத்து சென்று ஆய்வு செய்தனர். கொலை செய்த பின் அவருக்கு அடைக்காலமாக இருந்தவர் ஜெயபால் என்பதும், சுர்ஜித்தின் பெரியம்மா மகன் என்பதும் தெரியவந்தது.

கவின் கொலையானது எப்படி சரவணனுக்கு தெரிந்தது என சிபிசிஐடி விசாரித்த போது, ஜெயபால் தான் முதலில் சரவணனுக்கு ஃபோன் செய்து நடந்ததை கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சரவணன், கவின் காதலி சுபாஷினி பணிபுரியும் மருத்துவமனைக்கு நேரில் சென்று, சுபாஷினி தரதரவென இழுத்து அடித்துள்ளார். இது உண்மையான என சிபிசிஐடி போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து உறுதிப்படுத்தினர்.

பின்னர், சுர்ஜித்தை உடனே காவல்துறைக்கு வரும்படி சரவணன் கூறியுள்ளார். ஜெயபால் செல்வாக்கான குடும்பத்தை சேர்ந்தவர். சுர்ஜித் தாயாரின் அக்கா மகன் என்பதால் அவனை தவிர வேறு யார் இந்த கொலை சம்பவத்தை உடந்தையாக இருந்தனர் என தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.