அரசு ஒப்பந்தப் பணிகளுக்கு இ-வங்கி முறையில் உத்தரவாதத் தொகையை செலுத்த வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
எந்த ஒரு அரசு துறைகளில் ஒப்பந்தம் எடுப்பதாக இருந்தாலும் ஒப்பந்த மதிப்பில் ஒரு சதவீத தொகையை முன்வைப்புத் தொகையாக வங்கி வரைவோலையாகவோ அல்லது நிரந்தர வைப்புத் தொகையாகவோ அல்லது வங்கி உத்தரவாதமாகவோ அளிக்கும் நடைமுறை இதுவரை பின்பற்றப்படுகிறது.
ஆனால், தற்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் கோரப்படும் அனைத்து ஒப்பந்த பணிகளுக்கும் ஒப்பந்ததாரர்கள் முன்வைப்பு தொகையை ‘இ-வங்கி’ உத்தரவாதம் மூலமாக மட்டுமே செலுத்த வேண்டுமென புதிதாக நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இ-வங்கி உத்தரவாத நடைமுறை பல வங்கிகளில் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. குறிப்பிட்ட ஒரு சில வங்கிகளில் மட்டுமே செயல்பாட்டில் உள்ளது.
இதனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை டெண்டர்களில் பங்கேற்க விரும்பும் தகுதியான ஒப்பந்ததாரர்கள் இந்த புதிய நடைமுறையினால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை ஒப்பந்த பணிகளுக்கான வெளிப்படைத்தன்மையும் கேள்விக்குறியாகி உள்ளது.
எனவே, புதிய நடைமுறையுடன், பழைய நடைமுறையையும் சேர்த்து டெண்டர் கோர தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் KCP Infra Limited நிறுவனத்தின் நிறுவனரும், மேலாண்மை இயக்குநருமான கே. சந்திரபிரகாஷ் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நேற்று நீதிபதி என்.சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை கூடுதல் செயலர், சூப்பிரண்டு என்ஜினீயர் ஆகியோர்பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை 12ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.