கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
குறிப்பாக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் இங்குபயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியில் இடம் கிடைப்பது என்பது சற்று கடினமான நிலையாகும். இங்கு பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவில் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதால் இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர் இடையே கடும் போட்டி நிலவும். எனவே பெரும் சிபாரிசுக்கு இடையே இங்கு மாணவ மாணவிகள் சேர்க்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் இந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவர் ஒருவர் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியான சீண்டல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் ஆசிரியர் பல மாணவிகளிடம் இது போன்று பாலியல் ரீதியான சீண்டல்களை மேற்கொண்டதாகவும் எச்சரித்தும் கேட்பதில்லை என்றும் மாணவிகள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.
தங்களது புகாரை எழுத்து மூலமாகவும் தலைமை ஆசிரியரிடம் அளித்துள்ளனர். இந்த பிரச்சினை பள்ளியில் பூதாகரமாக வெடித்ததுடன் மாணவிகளின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராமச்சந்திர சோனியை கைது செய்ததுடன் போக்ஸோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தமிழகத்தில் பல்வேறு கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது
மேலும் இவருடன் விசாரிக்கின்ற போது தான் இதுபோன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என்பதும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.