கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கேந்திர வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறார்கள்.
குறிப்பாக அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் இங்குபயின்று வருகிறார்கள்.
இந்த பள்ளியில் இடம் கிடைப்பது என்பது சற்று கடினமான நிலையாகும். இங்கு பயிலக்கூடிய மாணவ, மாணவிகள் அகில இந்திய அளவில் தேர்வுகளை எளிதில் எதிர்கொள்ள முடியும் என்பதால் இந்த பள்ளியில் சேர்ப்பதற்கு பெற்றோர் இடையே கடும் போட்டி நிலவும். எனவே பெரும் சிபாரிசுக்கு இடையே இங்கு மாணவ மாணவிகள் சேர்க்கப்படுவது வழக்கம்.
இந்தநிலையில் இந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியர் ராமச்சந்திர சோனி என்பவர் ஒருவர் 8 ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் பாலியல் ரீதியான சீண்டல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார். தலைமை ஆசிரியர் நடத்திய விசாரணையில் ஆசிரியர் பல மாணவிகளிடம் இது போன்று பாலியல் ரீதியான சீண்டல்களை மேற்கொண்டதாகவும் எச்சரித்தும் கேட்பதில்லை என்றும் மாணவிகள் புகார் தெரிவித்து இருக்கிறார்கள்.
தங்களது புகாரை எழுத்து மூலமாகவும் தலைமை ஆசிரியரிடம் அளித்துள்ளனர். இந்த பிரச்சினை பள்ளியில் பூதாகரமாக வெடித்ததுடன் மாணவிகளின் பெற்றோருக்கும் தெரிய வந்தது.
தற்போது சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாணவியின் பெற்றோர் புகார் அளித்துள்ளனர்.
புகாரைத் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த ஆசிரியர் ராமச்சந்திர சோனியை கைது செய்ததுடன் போக்ஸோ உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆசிரியர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தமிழகத்தில் பல்வேறு கேந்திர வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக பணியாற்றியதும் தெரியவந்துள்ளது
மேலும் இவருடன் விசாரிக்கின்ற போது தான் இதுபோன்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டாரா என்பதும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.