திண்டுக்கல் : பழனியில் கோவில் திருவிழாவில் 200 ஆட்டுகிடாய் வெட்டி 10 ஆயிரம் பேருக்கு விருந்து வைத்து கோலாகலமாக நடைபெற்றது.
பழனியை அடுத்த கோம்பைபட்டி கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது பெரியதுரையான் கருப்பணசாமி கோவில் .
பழமையான இந்த கோவிலில் சித்திரை மாதம் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். கொரோனோ தொற்று பரவல் காரணமாக இரண்டு ஆண்டுகள் திருவிழா நடத்தப்படாமல் இருந்தது.
தற்போது தொற்று பரவல் குறைந்ததை அடுத்து கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு பக்தர்களால் வழங்கப்பட்ட 200 ஆட்டு கிடாய்கள் கருப்பணசாமிக்கு பலிகொடுக்கப்பட்டது.
பின்னர் பத்தாயிரம் பக்தர்களுக்கு அசைவ விருந்து தயார் செய்யப்பட்டது. அதற்காக இருபதுக்கும் மேற்பட்ட சமையல் கலைஞர்களை கொண்டு பெரிய அளவில் பாத்திரங்களை பயன்டுத்தி அசைவ உணவுகள் தயார் செய்யப்பட்டன.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற திருவிழாவில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து சாமி தரிசனம் செய்தனர். பெரியதுரையான் கோவிலில் விவசாயிகள் வளர்த்து கிடாய் வெட்டி பூஜை செய்து வணங்குவதால் நல்ல மழை பெய்து விவசாயம் செழிப்பாகவும், நல்ல விளைச்சலும், விளைபொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.
வரிசையாக லைக் போட்ட விராட் கோலி பாலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர் அவ்னீட் கவுர். இவர் பல ஹிந்தி…
பிரபல இயக்குநர் சொன்ன கதைப்படி படம் முழுவதும் பாவாடை கட்டிக்கிட்டு வரவேண்டும் என்பதால் படத்தில் இருந்து விலகியுள்ளார் சூப்பர் ஸ்டார்.…
தேர்தலை நோக்கி விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை நோக்கி விஜய் நடைபோட்டுக்கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் இரண்டு…
விஜய் டிவி நிகழ்ச்சி மூலம் பிரபலமாகி பெரிய திரையில் வாய்ப்பு பெற்றவர் நடிகர் யோகி பாபு. டைமிங் காமெடி மூலம்…
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பாஜக வடக்கு மண்டல் தலைவராக பாலகிருஷ்ணன் என்பவரது பதவி ஏற்பு விழா உசிலம்பட்டியில் உள்ள தனியார்…
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
This website uses cookies.