பணத்திற்காக கடத்திய நபரை குடியாத்தம் போலீசார் ஆந்திர மாநிலத்தில் மீட்ட நிலையில், கடத்தலில் ஈடுபட்டவர்களில் 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த பரதராமி தாசிராப்பல்லி கிராமத்தைச் சேர்ந்த தாமோதரன் (வயது 47) என்பவர், ஆருத்ரா கோல்டு டிரேடிங் கம்பெனியில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். பரதராமி பகுதியில் பல பேரிடம் தாமோதரன் பணிபுரியும் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் கம்பெனியில் பணத்தை முதலீடு செய்ய வைத்துள்ளார்.
முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத் தரும்படி தாமோதரனிடம் கேட்டுள்ளனர்.
அதனால், பணம் முதலீடு செய்த பரதராமி பகுதியை சேர்ந்த மூன்று பேர் சேர்ந்த கும்பல் கடந்த 12ஆம் தேதி தாமோதரனை கடத்தி உள்ளனர். இது தொடர்பாக தாமோதரன் மனைவி மகாலட்சுமி பரதராமி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணா உத்தரவின் பேரில், குடியாத்தம் துணை காவல் கண்காணிப்பாளர் ராமமூர்த்தி தலைமையிலான உதவி ஆய்வாளர்கள் மணிகண்டன் மற்றும் சிலம்பரசன் மற்றும் போலீசார் இன்று ஆந்திர மாநிலம் நெல்லு பட்லா என்ற இடத்தில் தாமோதரனை மீட்டுள்ளனர்.
தாமோதரனை கடத்திய கணேஷ் மற்றும் ராஜ்குமார் இருவரையும் கைது செய்து பரதராமி காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தப்பி ஓடிய நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.