Categories: தமிழகம்

அரிசி ஆலை அதிபர் கடத்தல்.. கட்டிப் போட்டு தாக்கி பணம், செல்போன் கொள்ளை.. கோவையில் பகீர்!

கோவை, உக்கடம் லாரிப்பேட்டை அண்ணாநகரை சேர்ந்தவர் ஜாபர் சாதிக் (35). இவர் பீளமேட்டில் அரிசி ஆலை நடத்தி வருகிறார்.

இவருக்கும், அரிசி கடத்தல் கும்பலை சேர்ந்த சிலருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் அவரை ஒருவர் செல்போனில் தொடர்பு கொண்டு வீட்டில் இருந்து வெளியே வருமாறு அழைத்தார். அப்போது வீட்டு முன்பு நின்று இருந்த 2 பேர் நாங்கள் அரிசி கடத்தலில் ஈடுபடுவதை யாரிடமும் சொல்லக் கூடாது என ஜாபர் சாதிக்கை மிரட்டினர்.

அதே நேரத்தில் மேலும் 5 பேர் அங்கு காரில் வந்தனர். அவர்கள் ஜாபர் சாதிக்கை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி காரில் கடத்தி சென்றனர்.

பின்னர் பாலக்காடு ரோட்டில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் பின்புறம் காரை நிறுத்தி ஜாபர் சாதிக்கை நைலான் கயிற்றால் கட்டிப்போட்டு சரமாரியாக அடித்து உதைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் இருந்த ரூ. 23 ஆயிரம், ஒரு செல்போன் ஆகியவற்றை பறித்து, அரிசி கடத்தல் சம்பந்தமாக வெளியே சொன்னால் தொலைத்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர்.

இது குறித்து ஜாபர் சாதிக் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில், போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். அதில், ஜாபர் சாதிக்கை கடத்தி தாக்கியது, கரும்புக்கடை சாரமேட்டை சேர்ந்த சிக்கந்தர் பாஷா (37), கோவைப்புதூரை சேர்ந்த தவ்பிக் (39), கரும்புக்கடை திப்பு நகரை சேர்ந்த முகமத் அசாருதீன் (35) உள்ளிட்ட 7 பேர் என்பது தெரியவந்தது.

3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.மேலும் இதில் தொடர்புடைய ஜியா, ஜாகீர், அன்வர், அஜீஸ் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படத்தை தடை செய்தது நியாயமா? தக் லைஃப்க்கு ஆதரவாக வந்த உச்சநீதிமன்ற உத்தரவு!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது” என…

24 minutes ago

நெல்சன் சார், நீங்க என்ன இங்க? இணையத்தில் லீக் ஆன வெற்றிமாறன்- சிம்பு படத்தின் ஷுட்டிங் ஸ்பாட்!

வடசென்னை 2? கடந்த 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் மிகப் பெரிய வெற்றியை…

50 minutes ago

சமந்தாவிடம் வம்பிழுத்த நபர்கள்.. கோபத்தோடு பேசிய சமந்தாவின் ஷாக் வீடியோ!

நடிகை சமந்தாவிடம் யாரோ வம்பிழுத்து, அவர் கோபத்தோடு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஜிம்மில்…

57 minutes ago

என் மீது வழக்கு போட்ட சிபிஐ அமைப்பை தண்ணி குடிக்க வைத்தவன் நான்… ஆ.ராசா பெருமிதம்!

புதுக்கோட்டை கலைஞர் தமிழ்ச் சங்கத்தின் 25வது ஆண்டு விழா நடைபெற்றது. இதையும் படியுங்க: 80 வயது மூதாட்டி கூட்டு பாலியல்…

2 hours ago

அந்த நபர் அப்படி பண்ணது… அதிர்ச்சியாகிட்டேன்- ஜொனிடா காந்திக்கு நடந்த பாலியல் சீண்டல்? அடக்கொடுமையே

மனம் கவர்ந்த பாடகி பாலிவுட்டில் “சென்னை எக்ஸ்பிரஸ்” திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலின் மூலம் சினிமாவிற்குள் பின்னணி பாடகியாக அடியெடுத்து…

2 hours ago

80 வயது மூதாட்டி கூட்டு பாலியல் வன்கொடுமை… சம்பவத்திற்கு பின் கும்பல் செய்த கொடூர சம்பவம்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள திராசு கிராமத்தில் 80 வயது மூதாட்டி இயற்கை உபாதை கழிக்க அருகில் உள்ள…

3 hours ago

This website uses cookies.