தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில் வாலிபர் ஓட ஓட வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 3வது தெருவை சேர்ந்தவர் சரவணகுமார் (வயது 28). இவர் இன்று இரவு புதிய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது அவரை பின்தொடர்ந்து இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அவரை வெட்டி சாய்த்தது சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து உயிரிழந்தார்
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வடபாகம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து கொலை நடைபெற்ற இடத்திற்கு வந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் அதிகம் நடமாடும் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.