Categories: தமிழகம்

பட்டம் பற பற… புதுச்சேரியில் முதல் முறையாக கடற்கரையில் காத்தாடி திருவிழா..!

புதுச்சேரி அரசின் சுற்றுலாத்துறை சார்பில் சின்ன வீராம்பட்டினம் ஈடன் கடற்கரையில் காத்தாடி திருவிழா இன்று துவங்கி மூன்று நாட்கள் நடத்துகிறது.

டால்பின்கள், குதிரை, பூனை, சுறாமீன், நீலத்திமிங்கலம்,பட்டாம்பூச்சி, தங்க மீன்கள், பாம்பு, கரடி,மிக்கி மவுஸ், ஆக்டோபஸ், கொரில்லா என 250க்கும் மேற்பட்ட காத்தாடிகளை வானத்தில் பறக்க விட்டு வண்ணமயமான கடற்கரையாக அலங்கரிப்பு

புதுச்சேரி சுற்றுலாவை மேம்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. புதுச்சேரி என்றாலே பல வகையான மதுபானங்களும் பிரென்ச் ஆட்சி காலத்தில் பயன்படுத்தப்பட்ட மது வகைகளும் பறந்து விரிந்து காணப்படுகிறது. இதற்காகவே பல்வேறு நாடுகளில் இருந்தும் மாநிலங்களில் இருந்தும் புதுச்சேரிக்கு அதிகளவில் மது பிரியர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர். இது மட்டும் இல்லாமல் புதுச்சேரி கடற்கரைப் பகுதி 16 கிலோமீட்டர் தூரத்திற்கு மணல் பரப்பால் அமைந்துள்ளது.

கடற்கரைப் பகுதியை மிகப்பெரிய சுற்றுலாத்தலமாக உருவாக்க அரசு தனியார் பங்களிப்புடன் மெரினா கடற்கரை, பாரடைஸ் பீச், ஈடன் பீச், போன்ற ஐந்துக்கும் மேற்பட்ட கடற்கரையை உருவாக்கியுள்ளது. இங்கு உணவு வகைகள், சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், பொழுதுபோக்கு பூங்கா உள்ளிட்டவை நிறுவப்பட்டுள்ளது இதனால் நாளுக்கு நாள் புதுச்சேரிக்கு சுற்றுலாப் பயணிகளின் வரத்து அதிகரித்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து வார இறுதி நாட்களில் சுற்றுலாப் பயணிகளை மகிழ்விப்பதற்காக பல்வேறு கலாச்சார நிகழ்வுகளும் கடற்கரைப் பகுதியில் நடத்தப்பட்டு வருகிறது இந்த வகையில் புதுச்சேரி சின்னா விரும்பட்டினம் அருகே உள்ள ஈடன் கடற்கரையில் மிகப் பிரம்மாண்டமான காத்தாடி திருவிழா புதுச்சேரி சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்து நடத்தியது.

இந்த காத்தாடி திருவிழாவை சபாநாயகர் செல்வம் தொடங்கி வைத்தார்.பிரான்ஸ், ஜெர்மனி, தாய்லாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து, வியட்நாம் மற்றும் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் சர்வதேச காத்தாடி அணிகளைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட காத்தாடி விடும் வீரர்கள் கலந்து கொண்டு, டால்பின்கள், குதிரை, பூனை, சுறாமீன், நீலத்திமிங்கலம்,பட்டாம்பூச்சி, தங்க மீன்கள், பாம்பு, கரடி,மிக்கி மவுஸ், ஆக்டோபஸ், கொரில்லா என 250க்கும் மேற்பட்ட காத்தாடிகளை வானத்தில் பறக்க விட்டு வண்ணமயமான கடற்கரையாக அலங்கரித்தனர்.

வார இறுதி நாள் என்பதால் அதிக அளவில் சுற்றுலா பயணிகளும் பொதுமக்களும் காத்தாடி திருவிழாவை கண்டுகளித்தனர்.கார்ட்டூன் கதாபாத்திரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் என, வெவ்வேறு வடிவ காத்தாடிகள், கண்கவர் வண்ணங்களில், நீலவான பின்னணியில் வானில் பறந்து பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது…

புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சி நடவடிக்கைகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது கடற்கரையில் காத்தாடி திருவிழா நடத்தப்படுவது மிக மகிழ்ச்சி அளிக்கிறது. புதுச்சேரியில் சுற்றுலாத் திட்டங்கள் அதிக அளவில் இருப்பதினால் அதிகமாக விரும்பி வரும் பகுதியாக உள்ளது என்று சுற்றுலா பயணிகள் தெரிவிக்கின்றனர்

அடுத்து இரண்டு நாட்களும் சின்ன வீராம்பட்டினத்தில் கடற்கரை பகுதியில் காத்தாடி திருவிழா நடைபெறுகிறது. பொது மக்களும் சுற்றுலா பயணிகளும் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.தொடர்ந்து காத்தாடி திருவிழாவை அரசு நடத்தும் என சபாநாயகர் செல்வம் கூறினார்.

Poorni

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

21 hours ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

22 hours ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

22 hours ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

22 hours ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

22 hours ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

23 hours ago

This website uses cookies.