திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் புத்தாண்டு விடுமுறையை கொண்டாடுவதற்காக சுற்றுலாப் பயணிகளின் குவிந்தனர். இதனால் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் சந்தேகப்படும் வகையில் வந்த கேரள மாநில பதிவு எண் கொண்ட காரை நிறுத்தி விசாரித்தனர்.
இதில் அவர்கள் கேரள மாநிலம் கண்ணூரை சேர்ந்த ரஞ்சிஸ் (27), முகமது நசீர் (24), ஜிஷ்ணு (22), அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரதிக்ஷா (25) என்பதும், பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்ததும் தெரிந்தது.
தொடர்ந்து விசாரித்தபோது காரில் இருந்தபடி ஒருவர் ஒரு பொட்டலத்தை வெளியில் தூக்கி எறிந்தார். போலீசார் அதை எடுத்து பிரித்து பார்த்த போது பல லட்சம் மதிப்புள்ள உயர்ரக மெத்தபெட்டமைன் போதை பொருள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் போதை பொருள், காரை பறிமுதல் செய்து 4 பேரையும் கைது செய்தனர்.
இதையும் படியுங்க: கருத்து வேறுபாடுலாம் இல்ல.. ஆனால், அவர்தான் தலைவர்.. அடித்துக்கூறும் ராமதாஸ்!
இந்த போதை பொருள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது, யாரிடம் வாங்கினார்கள், இவர்களுடன் வேறு யார் தொடர்பில் உள்ளனர் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் மதுமதி , காவல் ஆய்வாளர் பாஸ்கரன் , போக்குவரத்து சார்பு ஆய்வாளர் முத்துராம லிங்கம் உள்ளிட்ட காவலர்கள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு உள்ளனர் .
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.