கொடைக்கானலில் தோட்டக்கலைத்துறை மூலமாக வழங்கப்பட்ட விதைகள் தரம் அற்று இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டுகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் பெரும்பாலான மக்கள், விவசாயமே பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். மேல்மலை மற்றும் கீழ் மலை கிராமங்களில் விவசாயம் முக்கிய தொழிலாக இருந்து வருகிறது.
இந்த சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் பிரதான காய்கறிகளான கேரட், பீன்ஸ், அவரை, முட்டைக்கோஸ், முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் அதிகம் விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சூழலில் கொடைக்கானல் மலைப்பகுதியில் தோட்டக்கலைத் துறை மூலமாக மானிய விலையில் விதைகள் வழங்கப்பட்டு வருகிறது. அவ்வாறு வழங்கப்படும் விதைகள் தரமற்று இருப்பதாகவும், மண்ணின் தன்மைக்கு ஏற்ற விதைகளாக இல்லாமல் இருப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், அவர்கள் வழங்கும் விதைகள் பயிரிடும் போது பயிர்கள் சேதமடைந்து வருவதாகவும் விவசாயிகள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். எனவே, மண்ணின் தன்மைக்கு ஏற்ப உரிய விதைகளை தோட்டக்கலைத் துறையினர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.