திண்டுக்கல் : கொடைக்கானல் பழனி சாலை வடகவுஞ்சி அருகே ஏற்பட்டுள்ள காட்டுத் தீயை அணைக்க முடியாமல் வனத்துறை திணறி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ளது வடகவுஞ்சி மலை கிராமம். இந்த பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் திடீரென்று ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக பல ஏக்கர் பரப்பளவில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகின.
கொடைக்கானலில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சாரல் மழை மற்றும் திடீர் கனமழை பெய்தது. இருப்பினும் திடீரென்று வனபகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் உள்ள வன விலங்குகள் வடகவுஞ்சி கிராம பகுதிக்குள் நுழையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போதிய முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காத காரணத்தினால் இந்த காட்டுத் தீ ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணைக்க வனத்துறையினர் திணறி வருகின்றனர்.
வரும் காலங்களில் வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளன.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.