கொடைக்கானலில் பேருந்துகள் இயக்குவதில் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது.
திண்டுக்கல் கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து மதுரைக்கு ஏசி அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. கொடைக்கானலில் இருந்து மதுரைக்கு சாதாரண அரசு பேருந்தும் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஏசி அரசு பேருந்து ஓட்டுனர் அந்த பேருந்தை தாமதமாக இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
தாமதமாக பேருந்தை இயக்குவதால் அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துநர் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது.
‘உங்களுடைய நேரத்திற்கு ஏன் ஏசி பேருந்தை இயக்கவில்லை என்று அடுத்து உள்ள அரசு பேருந்து ஓட்டுனரும், கண்டக்டரும் கேட்டுள்ளனர். இதனால் இருதரப்புக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து செருப்புகளால் தாக்கி கொண்டதால் பரபரப்பும் ஏற்பட்டது.
அந்த நேரத்தில் கொடைக்கானல் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவிகள் உள்ளிட்டோர் இருந்த நிலையில், முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இரு தரப்பினரும் தாகத வார்த்தைகளை பேசி கேட்டு கொண்டனர். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.