திண்டுக்கல் ; கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடக்கவிருக்கும் மலர் கண்காட்சி மற்றும் கோடை விழா குறித்த அறிவிப்பை வருவாய் கோட்டாட்சியர் ராஜா வெளியிட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சீசன் ஆரம்பித்து உள்ளது. தொடர்ந்து கொடைக்கானலில் பிரையண்ட் பூங்காவில் வருடந்தோறும் மலர் கண்காட்சியுடன் கோடை விழா நடைபெறும். இதற்காக தோட்டக்கலை துறை சார்பில் பூங்காவில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
தொடர்ந்து இந்த வருடம் மே மாத சீசன் ஆரம்பித்து உள்ள நிலையில், பிரையண்ட் பூங்காவில் 60வது மலர் கண்காட்சி 26ம் தேதி துவங்கி ஜூன் 2ம் தேதி வரை கோடைவிழாவுடன் 8 நாட்கள் நடைபெறும் கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியர் ராஜா தெரிவித்து உள்ளார். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெறும் மலர்கண்காட்சி துவக்க விழாவில் ஊரக வளர்ச்சிதுறை துறை அமைச்சர் பெரியசாமி, சுற்றுலா துறை அமைச்சர் ராமசந்திரன், உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, வேளாண்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
படுதோல்வியடைந்த சிக்கந்தர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் பாலிவுட்டில் கடந்த மார்ச் மாதம் வெளியான “சிக்கந்தர்”…
காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் பகுதியை சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளியான நவமணி வயது 31 என்பவர் அதே பகுதியில் ஒன்பதாம்…
மாறன் குடும்பத்தில் ஏற்பட்ட புகைச்சல் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சன் டிவி பங்கு தொடர்பாக கலாநிதி மாறனுக்கு தயாநிதி மாறன்…
வெளியானது குபேரா தனுஷ் நடிப்பில் சேகர் கம்முலா இயக்கத்தில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள திரைப்படம் “குபேரா”. இத்திரைப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா,…
சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா…
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
This website uses cookies.