Categories: தமிழகம்

சூடுபிடிக்கும் கோடநாடு கொலை, கொள்ளை விவகாரம் : விசாரணை வளையத்தில் சிக்கிய பிரபல தொழிலதிபர்.. 3வது நாளாக கிடுக்குப்பிடி!

கோடநாடு கொலை மற்றும் கொலை வழக்கில் தொழிலதிபர் செந்தில்குமாரிடம் மூன்றாவது நாளாக தனிப்படை போலீசார் விசாரணை. கடந்த இரண்டு நாட்கள் விசாரணை நடத்தி வந்த நிலையில் இன்று விசாரணை தொடங்கியது.

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 24ஆம் தேதி நடைபெற்றது இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய ஆவணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிகிறது.

இது தொடர்பாக சயான், சதீசன், உதயகுமார், ஜம்சிர் அலி, தீபு, பிஜின் குட்டி சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், ஆகிய 10 பேர் விசாரணை வளையத்தில் உள்ளனர். இந்த வழக்கில் மேற்கு மண்டல காவல்துறை தலைவர் ஐஜி சுதாகர் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று சென்னை கோவை உதகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

இது வரை 220 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் முக்கியமாக சட்டமன்ற உறுப்பினர் ஆறுகுட்டி, சசிகலா உறவினர் விவேக், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் தோழி சசிகலா, மர வியாபாரி சஜீவன், அவரது சகோதரர் சிபி, அதிமுக பிரமுகர் அனுபவ் ரவி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன் மற்றும் பிஜின் சகோதரர் மோசஸ், மேலும் மர வியாபாரி சஜீவன் சகோதரர் சுனில் மற்றும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கண்ணன் ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது.

தற்போது செந்தில்குமார் என்பவரிடம் மூன்றாவது நாளாக தனிப்படை போலீசார் காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக செந்தில்குமாரிடம் தனிப்படை போலிசார் கோட நாடு பங்களாவில் மேற்கொள்ளப்பட்ட கட்டுமான பணிகள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது.

நேற்று செந்தில்குமாரிடம் 7 மணி நேரமும், அவுருடைய தந்தை ஆறுமுக சாமியிடம் 4 மணி நேரமும் தனித்தனியாக தனிப்படை போலிசார் விசாரணை நடத்தினர். இந்நிலையில் 3வது நாளாக செந்தில்குமார் மட்டும் விசாரணைக்கு ஆஜராகி உள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

16 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

16 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

16 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

17 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

17 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

18 hours ago

This website uses cookies.