திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே கொசஸ்தலை ஆற்றின் வெள்ளப்பெருக்கு காரணமாக தரை பாலம் மூழ்கியதால், பேரிடர் மீட்பு படை மூலம் கயிறு கட்டி பொதுமக்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர்.
தொடர் கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டம் சுப்பாரெட்டிபாளையம் பள்ளிபுரம் தரைபாலத்தை கடந்து கொசஸ்தலை ஆற்று வெள்ள நீர் செல்கிறது. இதனால், தீவு போன்று அப்பகுதி மாறியதால், பேரிடர் மீட்பு படையினர். கயிறு கட்டி பொதுமக்களை பாதுகாப்பு மீட்டனர்.
தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கனமழை காலங்களில் இப்பகுதியில் தரை பாலசாலை மூழ்கி விடுவதால் படகு போக்குவரத்து ஏற்பாடு செய்து வெள்ளம் வடியும் வரை சென்று வருவதாகக் கூறப்படுகிறது.
தற்போது மீண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளதால், தகவல் அறிந்து மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன், பொன்னேரி வட்டாட்சியர் செல்வகுமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களுக்கு உறுதி அளித்தனர்.
மேலும், அப்பகுதியில் ரப்பர் படகு மூலம் பொதுமக்கள் செல்வதற்கு தேவையான நடவடிக்கை தற்காலிகமாக மேற்கொண்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.