தமிழகம்

கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த வெடிகுண்டு மிரட்டல்? மோப்ப நாய்களுடன் பரபரப்பான வளாகம்…

கடந்த மாதம் 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்தன. இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட நிலையில் சந்தேகப்படும்படியான எந்த ஒரு பொருளும் சிக்கவில்லை. ஆதலால் இது வெறும் பொய் மிரட்டல் என்று அறியப்பட்டு அதிகாரிகள் பலரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். 

இந்த நிலையில்தான் இன்று காலை 10.45 மணி அளவில் இ-மெயில் மூலமாக மீண்டும் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. இதனால் பதறிப்போன அலுவலக ஊழியர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். 

இதனை தொடர்ந்து வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயல் இழப்பு காவல் துறையினர் மெட்டல் டிடெக்டர் மற்றும் மோப்ப நாய்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்திற்கு விரைந்து வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து கலெக்டர் அலுவலகம் முழுவதும் அவர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

இதற்கு முன்பு இமெயில் மூலம் இரண்டு முறை வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று மூன்றாவது முறையாக கோவை கலெக்டர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் இமெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

மூன்று முறையும் மிரட்டல் விடுத்தது ஒரே நபர்தானா? என போலீஸார் சந்தேகிப்பதாக கூறப்படுகிறது. இமெயில் அனுப்பிய நபர், தன்னை யார் என கண்டறியமுடியாத வகையில் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதால்  இமெயில் அனுப்பிய நபர் யார் என்று கண்டுபிடிப்பது பெரிய சவாலாக உள்ளதாக கூறுகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.