கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடம் இருந்து கணக்கில் வராத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்வாரிய செயற்பொறியாளராக காளிமுத்து என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அதிக அளவில் லஞ்சம் பெறுவதாக பரவலாக குற்றச்சாட்டு இருந்து வந்தது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி பீட்டர் பால் துரை தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுதா, அனிதா மற்றும் அதிகாரிகள் குழுவினர் இன்று நண்பகல் ஒரு மணி அளவில் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் திடீரென நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.
இந்த சோதனையில் மின்வாரிய செயற்பொறியாளர் காளிமுத்துவிடமிருந்து கணக்கில் காட்டப்படாத 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம் கைப்பற்றப்பட்டுள்ளதாக முதல் முதல் கட்டமாக தெரியவந்துள்ளது.
மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள பிற பணியாளர்கள் 10க்கும் மேற்பட்டோரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டை அடுத்த களாம்பாக்கத்தைச் சேர்ந்த வாலிபர் தனுஷ் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த விஜயஸ்ரீ ஆகியோர் சமூக வலைதளம்…
பிச்சைக்காரராக தனுஷ் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று வெளியாகியுள்ள “குபேரா”…
திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக சார்பில் வெங்கத்தூர் கட்சி அலுவலகத்தில்வளர்ந்த இந்தியாவின் அம்ரித் கால் சேவை நல்லாட்சி ஏழைகளின் நலன்11…
தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, ஜிம் சர்ப் உள்ளிட்ட பலரது நடிப்பில் இன்று…
திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் காவல்துறை அனுமதியுடன் கிளர்ச்சி பிரச்சார இயக்கம் நடைபெற்றது. இதையும் படியுங்க:…
This website uses cookies.