கோவில்பட்டி அருகே பட்டா மாறுதலுக்காக ரூ. 14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கே .சிதம்பராபுரம் கிராமத்தினை சேர்ந்தவர் ராகவன். இவர் தனது நிலத்திற்கு பட்டா மாறுதல் செய்வதற்காக சப் டிவிஷன் செய்ய விண்ணப்பம் செய்துள்ளார்.
சப் டிவிஷன் செய்து தர கே. சிதம்பராபுரம் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து ராகவன் லஞ்ச ஒழிப்பு துறை போலீசாரிடம் புகார் செய்துள்ளார்.
லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் அறிவுறுத்தலின்படி ராகவன், ரூ. 14 ஆயிரத்தை வழங்கியுள்ளார். அப்போது, அங்கு இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி ஹெக்டர் தர்மராஜ், தூத்துக்குடி லஞ்ச ஒழிப்புத்துறை இன்ஸ்பெக்டர் சுதா ஆகியோர் கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாளை கையும் களவுமாக பிடித்தனர்.மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தினர்.
கிராம நிர்வாக அலுவலர் வெங்கடேச பெருமாள் குற்றத்தை ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.