Categories: தமிழகம்

புள்ளய காப்பாத்துங்க.. மினி பேருந்தின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த சிறுவன்..!

சூளகிரி அருகே 3 வயது சிறுவன் மினி பேருந்தின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில்,மினிபேருந்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணம்மாகொத்தூர் என்ற கிராமத்தில் இன்று காலை தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்க்காக தாய் திவ்யா (28) மினி பேருந்தின் ஏறவந்த போது இவரின் 3 வயது மகனான கிரிவாஸ் என்ற சிறுவன் பேருந்தின் குறுக்கே ஓடிவந்த நிலையில் எதிர்பாராத விதமாக மினி பேருந்தின் முன்பக்க டயர் சிறுவன் மீது ஏறியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..

இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து கிராம மக்கள் மினி பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , ஓட்டுனர் ரூபேஷ்குமாரை பலமாக தாக்கியுள்ளார்.

இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மினி பேருந்தின் டயரில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்க்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் மினி பேருந்தின் டயரில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Poorni

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.