சூளகிரி அருகே 3 வயது சிறுவன் மினி பேருந்தின் டயரில் சிக்கி உடல் நசுங்கி உயிரிழந்த நிலையில்,மினிபேருந்தை கிராம மக்கள் அடித்து நொறுக்கிய சம்பவம் கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை அடுத்த உத்தனப்பள்ளி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணம்மாகொத்தூர் என்ற கிராமத்தில் இன்று காலை தனியார் தொழிற்சாலைக்கு வேலைக்கு செல்வதற்க்காக தாய் திவ்யா (28) மினி பேருந்தின் ஏறவந்த போது இவரின் 3 வயது மகனான கிரிவாஸ் என்ற சிறுவன் பேருந்தின் குறுக்கே ஓடிவந்த நிலையில் எதிர்பாராத விதமாக மினி பேருந்தின் முன்பக்க டயர் சிறுவன் மீது ஏறியதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்..
இந்த நிலையில் சம்பவ இடத்தில் இருந்து கிராம மக்கள் மினி பேருந்தின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி , ஓட்டுனர் ரூபேஷ்குமாரை பலமாக தாக்கியுள்ளார்.
இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு வந்து போலீசார் மினி பேருந்தின் டயரில் சிக்கி உயிரிழந்த சிறுவனின் உடலை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதன் சம்மந்தமாக உத்தனப்பள்ளி போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்திற்க்கான விசாரணையை நடத்தி வருகின்றனர். கிராமத்தில் மினி பேருந்தின் டயரில் சிக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.