கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் நடந்து சென்ற மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்து விட்டு நகையை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசித்து வரும் பொண்னியம்மாள் (78). இன்று காலை மாந்தோப்பு வழியாக அருகில் இருக்கும் மளிகை கடைக்குச் செல்வதற்காக தனியே நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர், அவர் காதில் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு, அவரிடம் இருந்த ரூபாய் 7000 எடுத்து கொண்டு, கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
மாந்தோப்பில் பெண் சடலம் இருப்பதாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் உட்பட கல்லாவி காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.