கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி அருகே மாந்தோப்பில் நடந்து சென்ற மூதாட்டியை கல்லை போட்டு கொலை செய்து விட்டு நகையை பறித்துச் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த கும்மனூர் கிராமத்தில் வசித்து வரும் பொண்னியம்மாள் (78). இன்று காலை மாந்தோப்பு வழியாக அருகில் இருக்கும் மளிகை கடைக்குச் செல்வதற்காக தனியே நடந்து சென்றுள்ளார்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த மர்ம நபர், அவர் காதில் அணிந்திருந்த தங்க நகையை பறித்துக் கொண்டு, அவரிடம் இருந்த ரூபாய் 7000 எடுத்து கொண்டு, கல்லால் தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.
மாந்தோப்பில் பெண் சடலம் இருப்பதாக காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளர் அமல அட்வின் உட்பட கல்லாவி காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.