தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து வாக்காளர்கள் ஸ்டாலின் நோக்கி கேள்வி கேட்க வேண்டும் என்று புதிய தமிழகம் கூட்டணி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் திண்டல் அடுத்துள்ள வேப்பம் பாளையத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்து கொண்டு புதிய தமிழகம் கூட்டணி கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி பேசினார்.
அவர் பேசியதாவது :- தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை நடத்தி இபிஎஸ் வேட்பாளர் அறிவித்த நிலையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளரை முன்னிறுத்தி திமுக தலைவர் ஸ்டாலின் ஒளிந்து கொண்டுள்ளார். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் கூட, அதிமுக போட்டியிடும் என்கிற மன தைரியத்துடன் இபிஎஸ் வேட்பாளர் அறிவித்தார்.
2021ம் முதல் தொடங்கி 2022ம் ஆண்டு நிறைவடைந்தும், திமுக ஆட்சி பொறுப்பு ஏற்ற ஸ்டாலின் இதுவரை தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. ஒரே கையெழுத்தில் நீட் தேர்வு ரத்து சொல்லி ஆட்சிக்கு வந்த நிலையில் இதுவரை நீட் தேர்வு ரத்து செய்யவில்லை. பழைய ஓய்வூதியம் ரத்து குடும்ப தலைவிக்கு மாதம் ஆயிரம், ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.
ஆகையால் தோல்வி பயத்தால் தான் முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார். அதனால் வாக்காளர்கள் ஸ்டாலின் நோக்கி கேள்வி கேட்க வேண்டும். மாதம் ஒருமுறை மின்கட்டண கணக்கீடு இதுவரை எடுக்கப்பட்டவில்லை. ஆகையால் இதற்கு கடிவாளம் போட இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் தென்னரசுக்கு வாக்களிக்க வேண்டும், என கேட்டுக்கொண்டார்.
பிரம்மாண்டம் என்றால் அவர்தான்… தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமாவில் பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு முதன்முதலில் எடுத்துக்காட்டாக திகழ்ந்தவர் ஷங்கர்தான்.…
பாகிஸ்தான் கொடி மீது சிறுநீர் கழிக்க சொல்லி 15 வயது சிறுவனை கொடுமைப்பத்தியுள்ளது ஒரு கும்பல். உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர்…
கனவுக்கன்னி தமிழ்நாட்டு இளைஞர்களின் தற்போதைய கனவுக்கன்னியாக வலம் வருபவர்தான் கயாது லோஹர். கன்னட திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கயாது,…
உத்தரபிரதேசத்தில் விசித்திரமான சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. குறிப்பாக மருமகனுடன் மாமியார் ஓடிய சம்பவம் அண்மையில் பேசுபொருளானது. தற்போது தாடி…
சென்னை புளியந்தோப்பு பகுதியில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்கும் நிகழ்ச்சியில், பிளீச்சிங் பவுடருக்கு பதிலாக கோலமாவு போடப்பட்டதாக புகார் எழுந்தது.…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையல், ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து…
This website uses cookies.