இருசமூக பிரச்சனையால் இடிக்கப்பட்ட காளியம்மன் கோவிலில் ஒருங்கிணைப்பு குழு முன்னிலையில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை.
கே.வி.குப்பம் அடுத்த கெம்மங்குப்பம் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் வழிபாடு நடத்துவது தொடர்பாக இரு சமூகத்தினர் (Sc மற்றும் மாற்று சமூகத்தினர்) இடையே ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு தரப்பினரால் (மாற்று சமூகத்தினரால்) கடந்த 6-ம் தேதி கோவில் இடிக்கப்பட்டு உள்ளே இருந்த காளியம்மன் சிலை எடுத்து செல்லப்பட்டது.
இது தொடர்பாக குடியாத்தம் கோட்டாட்சியர் சுபலட்சுமி தலைமையில் நடைபெற்ற அமைதி குழு பேச்சு வார்த்தையில் வட்டாட்சியர், அறநிலைய, பள்ளி தலைமை ஆசிரியர் உட்பட ஏழு பேர் கொண்ட கமிட்டி (ஒருங்கிணைப்பு குழு) அமைக்கப்பட்டு சிலையை மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டது.
இதனை அடுத்து நேற்று (22.08.2024) கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிலை ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்று இடிக்கப்பட்ட கோவிலில் மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
கே.வி.குப்பம் வட்டாட்சியர் சந்தோஷ் தலைமையிலான அறநிலை துறை அதிகாரிகள் அடங்கிய ஏழு பேர் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவினர் முன்னிலையில் முறையாக காளியம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இதில் இரு தரப்புக்கும் அதிகாரிகள் அழைப்பு விடுத்த நிலையில் ஒரு தரப்பினர் மட்டுமே கலந்துகொண்டனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.