தமிழகம்

தமிழ் மட்டுமே உயிர் மூச்சு… காமராஜரின் தொண்டன் : கடைசி வரை கட்சி மாறாத குமரி அனந்தன்!

காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் வயது மூப்பு காரணமான காலமானார். அவருக்கு வயது 93.

நேற்று இரவு 12.30 மணியளவில் அவர் காலமானார். சாலி கிராமத்தில் உள்ள அவரது மகள் தமிழிசை வீட்டில் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்க: நள்ளிரவில் பாஜக தலைவர் வீட்டில் குண்டு வெடித்ததால் பதற்றம்.. வெடிகுண்டை வீசிய மர்மநபர்கள் யார்?

தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும், தமிழ் மொழியையும் நேசித்தவர், தேசியத்தையும் காந்தியத்தையும் வாழ்க்கை முறையாக கொண்டவர். கடந்த வருடம் தமிழ்நாட்டின் தகைசால் விருதை குமரி அனந்தனுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியிருந்தார்.

தந்தை மறைவு குறித்து உருக்கமாக பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை, தமிழ் தமிழ் என்பது அவர்களின் உயிர் மூச்சு, மொராஜி தேசாய் ஆட்சி செய்யும் போது எம்பியாக தேர்வு செய்யப்பட்ட குமரி அனந்தன், முதல் முதலில் தமிழை பாராளுமன்றத்தில் ஒலிக்க செய்வதர். 8 முறை பாத யாத்திரை செய்திருக்கிறார், தமிழக காங்., கமிட்டி தலைவராக இருந்திருக்கிறார், 4 முறை எம்எல்ஏவாகவும் இருந்திருக்கிறார். அவர் 12.30க்கு தனது கடைசி மூச்சை விட்டதாக குறிப்பட்டார்.

குமரி அனந்தன் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்தில் தனது 93வது பிறந்தநாளை குடும்பத்தோடு கொண்டாடிய
குமரி அனந்தனின் இறுதிச்சடங்கு இன்று மாலை 5 மணிக்கு விருகம்பாக்கம் இடுகாட்டில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.