குமரி ; கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே கல்லூரி மாணவியை காதலித்து திருமணம் செய்வதாக கூறி காதலன் ஏமாற்றியதால் விஷம் அருந்தி தற்கொலையா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே வாவறை பகுதியை சேர்ந்தவர் சின்னப்பர் (வயது 56) கூலித்தொழிலாளியான இவருக்கு, தங்கபாய் (வயது 51) என்ற மனைவியும், மூன்று மகள்களும் உள்ளனர். இதில் இரண்டு பேருக்கு திருமணமான நிலையில், மூன்றாவது மகள் களியக்காவிளை பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் முதலாவது ஆண்டு படித்து வரும் நிலையில், பள்ளியில் படிக்கும் போதே நித்திரவிளை பகுதியை சேர்ந்த வருண் என்பவரை காதிலித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், காதலன் வருண் மாணவியிடம் திருமணம் செய்வதாக கூறி பல இடங்களுக்கு அழைத்து சென்று ஊர் சுற்றியதாக கூறப்படுகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு முன் வருணின் குடும்பத்தினர் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காமல் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், வீட்டில் யாரிடமும் பேசாமல் சோகமாக இருந்து வந்துள்ளார்.
கடந்த 1ம் தேதி காலை திடீரென மாணவிக்கு வயிற்றுவலி ஏற்பட்டு உள்ளதாக கூறியதை தொடர்ந்து, அவரது பெற்றோர் மாணவியை அழைத்து கொண்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்து உள்ளனர். மூன்று நாட்கள் அங்கு சிகிச்சை பெற்றும் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து 4ம் தேதி கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து மாணவியின் தாயார் தங்கபாய் நித்திரவிளை போலீசில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காதலன் திருமணம் செய்வதாக கூறி ஏமற்றியதால் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.