கும்பகோணம் மேற்கு காவல்நிலைய வளாகத்தில் காவல்துறையை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர் உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கும்பகோணம் செக்காங்கண்ணியை சேர்ந்தவர் ஜான் பென்னி (49). இவர் ஆட்டோ ஓட்டுநர், இவரது மகன் பிரவின்குமாரை மேற்கு காவல்துறையினர், வழிப்பறி வழக்கு தொடர்பாக விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
இதனால் காவல்துறையை கண்டித்து பிரவின் குமாரின் தந்தை ஜான் பென்னி, மேற்கு காவல்நிலைய வளாகத்தில் உடலில் மண்ணென்னையை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஆபத்தான நிலையில் கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது தீக்காயம் அதிகமாக இருப்பதால், மருத்துவமனையில் நீதிபதி முன்பு வாக்குமூலம் பெறப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தொடர்ந்து, தனது மகன் மீது பல்வேறு பொய் வழக்குகளை போட்டு வருவதாக ஜான் பென்னி தெரிவித்தார். பிரவின்குமார் மீது ஆயுத தடைச் சட்டம், வழிப்பறி போன்ற மூன்று வழக்குகள் நிலுவையில் உளளதாக காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.