ஈரோடு : தாளவாடி பகுதியில் ஊருக்குள் உலா வரும் காட்டு யானையை வனப்பகுதியில் விரட்ட பொள்ளாச்சி டாப்ஸ்லிப்பில் இருந்து இரண்டு கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.
சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி, ஆசனூர், ஜீரகள்ளி உள்ளிட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் அவ்வப்போது விவசாய நிலங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.
இதே போல் ஆசனூர் வனச்சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலை முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானை அவ்வப்போது வாகனங்களை துரத்தி வருகிறது.
மேலும் பகல் நேரங்களில் ஊருக்கு உலா வருகிறது. அதனைத் தொடர்ந்து ஜீரகள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட கிராமங்களில் இரண்டு விவசாயிகளை தாக்கிய கருப்பன் என்கிற ஒற்றை காட்டு யானை தற்போது விவசாய நிலங்களில் நுழைந்து விவசாய பயிர்களை சேதம் செய்து வருகிறது.
மேலும் விவசாயிகளையும் துரத்தி வருவதால் அவர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்த யானைகளை அடர்ந்த வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வனத்துறைக்கு கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து பொள்ளாச்சி டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, ராமு ஆகிய இரண்டு கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர்.
இன்று முதல் கும்கி யானைகள் கொண்டு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகளை அடர்ந்த வனப் பகுதியில் வரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.