கிழக்கு கடற்கரைச் சாலையில் கூவத்தூர் அருகே உள்ள பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவருக்கு வயது 42. இவர் காத்தாங்கடை பகுதியில் பெட்ரோல் பங்க் ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 11 மணி அளவில் இவர் பெட்ரோல் பங்கில் இருந்து வீட்டிற்குச் சென்றபோது இவரது வாகனத்தை 4 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டுச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கூவத்தூர் போலீஸார் இக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வந்தனர். இந்த நிலையில் மோகன் ராஜை கொலை செய்ததாக கூறப்படும் 4 பேர் நீதிமன்றத்தில் தற்போது சரணடைந்துள்ளனர்.
அதாவது கடந்த மே மாதம் மோகன் ராஜின் பெட்ரோல் பங்கில் விசிக பிரமுகர் ரகு என்பவர் மதுபோதையில் கல்லூரி மாணவரிடம் வம்பிழுத்துள்ளார். இதனால் அவர் பதிலுக்கு தாக்கியுள்ளார். இச்சம்பவம் பெட்ரோல் பங்கில் இருந்த சிசிடிவியில் பதிவாகியிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது. இதனால் ஏற்பட்ட அவமானத்தினால்தான் ஆத்திரம் ஏற்பட்ட நிலையில்தான் ரகு மோகன் ராஜை தனது ஆட்களுடன் கொலை செய்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோகான்லாலின் வாரிசுகள்? மோகன்லால்-சுசித்ரா தம்பதியினருக்கு பிரணவ் என்ற மகனும் விஸ்மயா என்ற மகளும் உள்ளனர். இதில் பிரணவ் சிறு வயதில்…
தெலுங்கு சினிமாவின் ராக்ஸ்டார் தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் தேவி ஸ்ரீ பிரசாத் தமிழில் பல திரைப்படங்களுக்கு…
திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலுக்கு தனது தாயாருடன் சென்ற நிகிதா என்ற பெண்மணி அக்கோயிலில் உள்ள காவலாளி அஜித்குமாரிடம் தனது…
திருட்டு வழக்கு தொடர்பாக திருப்புவனம் மடப்புரம் காளியம்மன் கோவிலின் தற்காலிக காவலாளியான இளைஞர் அஜித்குமாரை விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்ற…
சூர்யா ரீல்ஸால் பிரபலமான திவாகர் கடந்த ஆண்டு இன்ஸ்டாவில் கஜினி சூர்யா போல் ரீல்ஸ் செய்து இன்ஸ்டா உலகத்தில் பிரபலமானவர்…
திருப்புவனம் மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில்…
This website uses cookies.