இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு அடியாட்களுடன் சென்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை அடுத்துள்ள மணலி புதுநகரைச் சேர்ந்த ரிஷி என்பவர் 2019ல் இடம் ஒன்று வாங்கியதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ஷகிலா என்பவர் அதே இடத்தை உரிமைக் கொண்டாடியதாகவும், இது தொடர்பான வழக்கு பத்திரப்பதிவு அலவலகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஷகிலா இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபுவை தொடர்பு கொண்டு முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: உதயநிதிக்கு என்ன யோக்கிதை இருக்கு..? திமுக அரசை கையை நீட்டி கோபத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் ; ஆர்பி உதயகுமார்
அதன்பேரில், பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு, வழக்கறிஞர்கள் எனக் கூறப்படும் 10க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சென்று, ரிஷியின் தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைய முயற்சித்ததாகவும், முகத்தில் துணியைக் கட்டியபடி, அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிஷி மணலி புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2007ம் ஆண்டு உரிமையாளரான திருவெற்றியூரைச் சேர்ந்த ரவீந்திரன், ரேவதி உள்ளிட்டோரிடம் இருந்து இந்த இடத்தை முறைப்படி வாங்கியதாகவும், ஆனால், இவர்களின் உறவினர் எனக் கூறப்படும் ஷகிலா இடத்தை உரிமை கோரி மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட ரிஷி தெரிவித்துள்ளார்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.