இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு அடியாட்களுடன் சென்று மிரட்டியதாக புகார் எழுந்துள்ளது.
சென்னை அடுத்துள்ள மணலி புதுநகரைச் சேர்ந்த ரிஷி என்பவர் 2019ல் இடம் ஒன்று வாங்கியதாகவும், அதே பகுதியைச் சேர்ந்த ஷகிலா என்பவர் அதே இடத்தை உரிமைக் கொண்டாடியதாகவும், இது தொடர்பான வழக்கு பத்திரப்பதிவு அலவலகத்தில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஷகிலா இயக்குநர் பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபுவை தொடர்பு கொண்டு முறையிட்டதாகக் கூறப்படுகிறது.
மேலும் படிக்க: உதயநிதிக்கு என்ன யோக்கிதை இருக்கு..? திமுக அரசை கையை நீட்டி கோபத்தோடு கேள்வி கேட்கும் மக்கள் ; ஆர்பி உதயகுமார்
அதன்பேரில், பா.ரஞ்சித்தின் சகோதரர் பிரபு, வழக்கறிஞர்கள் எனக் கூறப்படும் 10க்கும் மேற்பட்ட அடியாட்களுடன் சென்று, ரிஷியின் தனியார் நிறுவனத்தில் அத்துமீறி நுழைய முயற்சித்ததாகவும், முகத்தில் துணியைக் கட்டியபடி, அங்கு பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை அடித்து சேதப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக ரிஷி மணலி புதுநகர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2007ம் ஆண்டு உரிமையாளரான திருவெற்றியூரைச் சேர்ந்த ரவீந்திரன், ரேவதி உள்ளிட்டோரிடம் இருந்து இந்த இடத்தை முறைப்படி வாங்கியதாகவும், ஆனால், இவர்களின் உறவினர் எனக் கூறப்படும் ஷகிலா இடத்தை உரிமை கோரி மோதலில் ஈடுபட்டு வருவதாகவும் பாதிக்கப்பட்ட ரிஷி தெரிவித்துள்ளார்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.