Categories: தமிழகம்

அடிப்படை கல்வி தாய்மொழியில்தான்… மொழியை மாணவர்கள் மீது திணிக்க முடியாது : மயில்சாமி அண்ணாதுரை கருத்து!!

மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மைல்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் தலைவர் சின்னத்தம்பி மற்றும் இயக்குனர் உதயகுமார் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயில்சாமி அண்ணாதுரை
மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம். மொழியை அவர்கள் மீது திணிக்க முடியாது

உலக அளவில் பல்வேறு பொருக்கள் சீனாவை நம்பி இருந்த நிலையில் தற்போது உலக நாடுகள் தங்களுக்கு தேவையான பொருள்கள் அவர்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. எனவே வரும் காலங்களில் பொறியியல் மாணவர்கள் தேவை அதிகரிக்கும் .

விவசாயத்திலும் அறிவியலை பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய சூழலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் பொறியியல் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்

பொறியியல் மாணவர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை என்ற தவறான தகவல் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் நல்ல பாதைக்கு செல்ல முடியும் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் தவறான பாதைக்கு தான் அவர்கள் இழுத்து செல்லப்படுவார்கள் இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்

இஸ்ரோ விரைவில் 36 செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. குலசேகரப்பட்டினம் மற்றும் சிறிய ஏவுகணை தளம் ஆகியவை உருவாக்கப் பட்டவுடன் இஸ்ரோ அதிக அளவு ராக்கெட்டுகளை தயார் செய்ய முடியும்

இணையதள முறைகேடுகளை தடுப்பதற்கு காவல்துறை அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றாலும் குற்றங்களை குறைப்பதற்கு இணையதளங்களை கண்காணிக்க வேண்டும்.

அடிப்படைக் கல்வி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் இணை மொழியான ஆங்கிலத்தை பிறகு கற்றுக் கொள்ள முடியும்

அடிப்படைக் கல்வியை தாய் மொழியில் படித்துவிட்டு அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவர்கள் முடிவுக்கு ஏற்ப மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. எதையும் யாரும் திணிக்க முடியாது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!

ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…

20 hours ago

திருமணமானவுடன் சரக்கு பார்ட்டி… பிரியங்காவை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…

22 hours ago

தலைக்கேறிய மது போதையில் உளறிய குட் பேட் அக்லி நாயகி… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…

22 hours ago

குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!

தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…

22 hours ago

தமன்னாவின் காதலை சிதைத்த சிவகுமார்? கார்த்தியை மிரட்டி கல்யாணம் செய்து வைத்த பகீர் சம்பவம்!

கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…

23 hours ago

கனிமொழி எம்பி தேசவிரோதியா? பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சால் பரபரப்பு!

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…

24 hours ago

This website uses cookies.