மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும் அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம் என இஸ்ரோ முன்னாள் இயக்குநர் மைல்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒன்பதாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
இதில் 400க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பட்டங்களை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை வழங்கி சிறப்புரையாற்றினார்.
கல்லூரியின் தலைவர் சின்னத்தம்பி மற்றும் இயக்குனர் உதயகுமார் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மயில்சாமி அண்ணாதுரை
மாணவர்கள் அடிப்படை கல்வியை தாய் மொழியில் தான் கற்றுக்கொள்ள வேண்டும். அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அந்த மொழியில் படிக்கலாம். மொழியை அவர்கள் மீது திணிக்க முடியாது
உலக அளவில் பல்வேறு பொருக்கள் சீனாவை நம்பி இருந்த நிலையில் தற்போது உலக நாடுகள் தங்களுக்கு தேவையான பொருள்கள் அவர்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளது. எனவே வரும் காலங்களில் பொறியியல் மாணவர்கள் தேவை அதிகரிக்கும் .
விவசாயத்திலும் அறிவியலை பயன்படுத்தி விவசாயம் செய்யக்கூடிய சூழலை தற்போது ஏற்பட்டுள்ளது. எனவே வரும் காலங்களில் பொறியியல் மாணவர்களுக்கு அதிக வாய்ப்பு உள்ளது அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
பொறியியல் மாணவர்களுக்கு இனி வாய்ப்பு இல்லை என்ற தவறான தகவல் தற்போது பரப்பப்பட்டு வருகிறது. தொழில்நுட்பத்தை மாணவர்கள் முறையாக பயன்படுத்தினால் நல்ல பாதைக்கு செல்ல முடியும் முறையாக பயன்படுத்தவில்லை என்றால் தவறான பாதைக்கு தான் அவர்கள் இழுத்து செல்லப்படுவார்கள் இதனை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
இஸ்ரோ விரைவில் 36 செயற்கைக்கோள்களை அனுப்ப உள்ளது. குலசேகரப்பட்டினம் மற்றும் சிறிய ஏவுகணை தளம் ஆகியவை உருவாக்கப் பட்டவுடன் இஸ்ரோ அதிக அளவு ராக்கெட்டுகளை தயார் செய்ய முடியும்
இணையதள முறைகேடுகளை தடுப்பதற்கு காவல்துறை அதிக நடவடிக்கைகள் எடுத்து வருகிறது என்றாலும் குற்றங்களை குறைப்பதற்கு இணையதளங்களை கண்காணிக்க வேண்டும்.
அடிப்படைக் கல்வி தாய் மொழியில் தான் இருக்க வேண்டும் இணை மொழியான ஆங்கிலத்தை பிறகு கற்றுக் கொள்ள முடியும்
அடிப்படைக் கல்வியை தாய் மொழியில் படித்துவிட்டு அதன் பிறகு மாணவர்கள் என்ன விரும்புகிறார்களோ அவர்கள் முடிவுக்கு ஏற்ப மொழியை தேர்ந்தெடுக்கும் உரிமை அவர்களுக்கு உண்டு. எதையும் யாரும் திணிக்க முடியாது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.