வலது கையில் ஏற்பட்ட காயத்திற்கு இடது கையில் பேண்டைடு : வைரலாகும் அண்ணாமலையின் சர்ச்சை வீடியோ!!
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார்.
வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்கு உட்பட்ட வேட்டைக்காரன் புதூர் பகுதியில் “என் மண் என் மக்கள்” பாதயாத்திரையை கடந்த செப்.23ல் தொடங்கினார்.
சுமார் 2 கி.மீ நடந்து ஆனைமலை முக்கோணம் பகுதியில் பாதயாத்திரை மேற்கொண்டார். பாதை யாத்திரையின் போது கூட்ட நெரிசலில் வலது கை விரலில் சிறிது காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
பாதயாத்திரை ஆனைமலை முக்கோணம் பகுதியில் முடிவுற்று பிரச்சார வாகனத்தில் ஏறி பொதுமக்கள் இடையே உரையாற்றுவதற்கு முன்பு வலது கை விரல் பகுதியில் காயத்தைப் பார்த்து கை உதறினார். அதைப் பார்த்த மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் பேண்டைடு (Band-aid) எடுக்குமாறு தொண்டரிடம் கூறினார்.
உடனடியாக வாகனத்தில் இருந்த தொண்டர் பேண்டைடு எடுத்து முருகானந்தத்திடம் கொடுத்தார். முருகானந்தம் வலது கையின் விரல் பகுதியில் போடுவதற்கு பதிலாக இடது கையின் விரல் பகுதியில் போட்டு உள்ளார்.
இது சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. முருகானந்தம் பேண்டைடு ஒட்டியதை பார்த்துக்கொண்டே இருந்த அண்ணாமலை, எதுவும் பேசவில்லை. இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.